26 . புலால் மறுத்தல்
251 . தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் .
பொருள் :
தன் உடலை வளர்ப்பதற்கு பிற உயிரின் உடம்பை உண்பவன் , எப்படி அருள் உடையவனாக இருப்பான் ?
252 . பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு .
பொருள் :
பொருளைப் போற்றிக் காக்காதவற்கு பொருளினால் சிறப்பு இல்லை . அதுபோல் அருள் சிறப்பு , புலால் உண்பவர்க்கு இல்லை .
253 . படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம் .
பொருள் :
கொலைக் கருவிகளைக் கையில் வைத்திருப்பவரைப் போலவே , உயிர்களின் உடலை சுவைத்து உண்பவரின் மனத்திலும் இரக்கம் இருக்காது .
254 . அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல் .
பொருள் :
அருள் என்பது ஓர் உயிரைக் கொள்ளாமல் இருப்பதே . அவ்வுயிரின் உடலைத் தின்னாமல் இருப்பதே அறம் ஆகும் .
255 . உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு .
பொருள் :
புலால் உண்ணாமலிருந்தால் பல உயிர்கள் வாழ முடியும் . புலால் உண்பவனை நரகம் வெளியே விடாமல் விழுங்கிவிடும் .
256 . தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் .
கருத்துகள்
கருத்துரையிடுக